Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு ... கூடலுார் சுந்தரவேலவர் கோயிலில் குரு பெயர்ச்சி  விழா கூடலுார் சுந்தரவேலவர் கோயிலில் குரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: மறுசீராய்வு கோரி பக்தர்கள் உண்ணாவிரதம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: மறுசீராய்வு கோரி பக்தர்கள் உண்ணாவிரதம்

பதிவு செய்த நாள்

06 அக்
2018
11:10

மதுரை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதித்ததை உச்ச நீதிமன்றம் மறுசீராய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி முதல்முறையாக மதுரையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளோம், என பக்தர் கண்ணன் கூறினார்.உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து கண்ணன் பேசியதாவது:48 நாட்கள் விரதம் இருந்து இருமுடி சுமந்து ஐயப்பனை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

மண்டல விரதம் இருப்பது 10 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்கு உட்பட்ட பெண்களால் இயலாது. இதை கேரள பெண் பக்தர்கள் உணர்ந்துள்ளனர். ஐயப்பன் கோயிலுக்கு செல்ல மாட்டோம் என கோயில்களில் சத்தியம் செய்து வருகின்றனர். ஐயப்பன் மீது நம்பிக்கை வைத்துள்ள நம் பெண்கள் செல்ல மாட்டார்கள். சிவகாசி, சென்னையில் உண்ணா விரதம் நடக்கவுள்ளது. உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை மறுசீராய்வு செய்ய வேண்டும், என்றார். சுப்பையா, சுப்பிரமணியன், ஹரிஹரன், ரவி, லோகிதாஸ் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


மதுரை பக்தர்கள் கூறியதாவது:தவிட்டுச்சந்தை அலமேலு: எனக்கு 54 வயதாகிறது. பேரன், பேத்திகள் உள்ளனர். சிறு வயதில் இருந்தே ஐயப்பன் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. 50 வயது கடந்த பிறகு தான் செல்ல வேண்டும் என பெரியோர் கூறினர். அதற்கு கட்டுப்பட்டு 50 வயது பூர்த்தியானதும் கடந்த மூன்று ஆண்டுகளாக கோயிலுக்கு சென்று வருகிறேன். கோயில் ஐதீகத்தை மதிக்க வேண்டும்.


ஜெய்நகர் குருசாமி கருப்பையா: கார்த்திகையில் மாலை அணிந்து, ஒரு வேளை உணவு மட்டுமே உண்டு, கட்டாந்தரையில் துண்டை விரித்து உறங்கி, அதிகாலை எழுந்து நீராடி, ஐயப்பனை வழிபடுவதில் இருக்கும் பேரானந்தம் பக்தர்களுக்கே உரித்தானது. சன்னியாச கோலத்தில் வீற்றிருக்கும் ஐயப்பனை பெண்கள் வழிபடக்கூடாது என்றில்லை. ஆகம விதிகள் படி அதற்கான வயதை எட்டியதும் வழிபடலாம்.


நடராஜ் நகர் உஷா: என் கணவர் ஐயப்ப பக்தர். ஆண்டு தோறும் விரதம் இருந்து சபரிமலை செல்கிறார். விரதம் இருக்கும் 48 நாட்களும் ஐயப்பனே வீட்டில் தங்கியிருப்பது போன்ற உணர்வு ஏற்படும். எனக்கும் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது. 50 வயது கடந்தபின் ஐயப்பனை காண செல்வேன் அதற்காக காத்திருப்பது ஐப்பனே விடுத்த கட்டளை என்பதை உணர்ந்துள்ளேன். இவ்வாறு கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புனித சவான் மாதம் இரண்டாம் சோமவாரத்தை முன்னிட்டு, சிவ தரிசனம் செய்ய இராமேஸ்வரம், வாரணாசி, அயோத்தி ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் ஆடி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிஆண்டாள் சந்நிதி உள்ளது. இங்கு ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருமங்கலம்; கள்ளிக்குடி தாலுகா செங்கப்படை கோயிலில் 68 ஆண்டுகளாக அணையாமல் தொடர்ந்து விளக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar