செஞ்சி வடவெட்டி ரங்கநாதபுரம் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2018 12:10
செஞ்சி: மேல்மலையனூர் அடுத்த வடவெட்டி ரங்கநாதபுரம் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் (அக்.,8ல்) இரவு புரட்டாசி மாத மகாளய அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
அதனையொட்டி அன்று காலை வினாயகர், பெரியாழி அம்மன், அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 10:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டும், மகா தீபாராதனையும் நடந்தது.