திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் கோயிலில் அக்.19ல் அம்பு போடும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2018 12:10
திருப்புல்லாணி:திருப்புல்லாணி பத்மாஸனித்தாயார் சமேத ஆதிஜெகநாதபெருமாள் திருக்கோயிலில் நவராத்திரி திருவிழா இன்று(அக்.10) முதல் துவங்குகிறது. காலை 10:00 மணிக்கு விசேஷ திருமஞ்சனமும், இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் நிகழ்ச்சியும் நடக்கிறது. விஜயதசமி தினமான அக்.19ல் ஆதிஜெகநாதபெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை பத்மாஸனித்தாயார் கைங்கர்ய சபாவினர் செய்து வருகின்றனர்.