காஞ்சிபுரம்: தேவலோக சிற்பியும், ஐந்து தலையுடைய, விஸ்வ பிரம்ம சதாசிவ மூர்த்தி ஜெயந்தி விழா காஞ்சிபுரத்தில் நடந்தது.விஸ்வ கர்மா குலத்தின், பாரம்பரியம் மிக்க ஐந்து தொழில் சிறப்படையவும், வியாபாரம் செழிக்கவும், பெரிய காஞ்சிபுரம் ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலில், ஸ்ரீமத் விராட் விஸ்வபிரம்ம சதாசிவ மூர்த்தியின், 23வது ஆண்டு ஜெயந்தி விழா நடந்தது.திருவண்ணாமலை ஆதி சிலிங்காச்சார்ய பீடம், சீனந்தல் மடாலய, 65வது மடாதிபதி சிவராஜ ஆச்சார்ய குரு சுவாமி பங்கேற்றார்.விழா ஏற்பாடுகளை, ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோவில் விஸ்வகர்மா டிரஸ்ட், தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம், காஞ்சிபுரம் நகர, நகைத்தொழிலாளர்கள் சங்கம் மற்றும் பெரிய காஞ்சிபுரம் விஸ்வகர்மா சமூகத்தினர் செய்திருந்தனர்.