கோயில்களில் சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல், தயிர்ச்சாதம், புளியோதரை நைவேத்யம் செய்வர். திருச்சி பூலோகநாத சுவாமி கோயிலில், சேனைக்கிழங்கு, உருளை, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, வேர்க்கடலை உள்ளிட்ட பூமிக்கடியில் விளைவதை நைவேத்யம் செய்கின்றனர். வாஸ்து பரிகாரத் தலமான இங்கு வாஸ்து பூஜையன்று சிவன் சன்னதியின் முன் ஆறுகலசங் களுடன் அக்னி குண்டம் அமைத்து வழிபட்டு அபிஷேகம் செய்வர்.