* கோபமே மனிதனுக்கு கொடிய எதிரி; பொறுமையே நல்ல நண்பன். * வேதத்தின் சாரம் உண்மை; உண்மையின் சாரம் அடக்கம்; அடக்கத்தின் சாரம் மோட்சம். உண்மையின் வழியில் நடப்பவன் விரைவாகக் கடவுளை அடைவான். * பேராசை நோக்கத்துடன் மக்கள் செயல்பட்டால் அறிவு முற்றிலும் அழியும். * தர்மம் இருக்குமிடத்தில் கடவுள் இருக்கிறார். கடவுள் இருக்குமிடத்தில் வெற்றி இருக்கும். * தர்மத்தில் நம்பிக்கை இல்லாவிட்டால் வேறெந்த நல்ல விஷயத்திலும் நம்பிக்கை ஏற்படாது. * தர்மத்தை முழுமையாக நம்பி பின்பற்றும் போது அது நம்மை கட்டிக் காக்கும். * மனம் சோர்வுறும் போதெல்லாம் கடவுளின் திருநாமங்களைச் சொல்லுங்கள். * மனம், வாக்கு, செயலில் அடக்கத்தை பின்பற்றுங்கள். அடக்கம் இல்லாவிட்டால் சொர்க்கத்தில் நுழைய முடியாது. * தர்மம் மெதுவாக செயல்படுவது போல தோன்றலாம், ஆனால் அதன் விளைவு பெரியதாக இருக்கும். - விடை தருகிறார் வியாசர்