Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செண்பகாதேவியம்மன் கோயிலில் ... காளியம்மன் கோவிலுக்கு திடீர் பூட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சி அருகே வயலூர் முருகன் 4 கிராம சுவாமிகளுடன் சந்திப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2012
11:02

திருச்சி: திருச்சி வயலூர் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் முத்துக்குமார சுவாமி புறப்பாடாகி, உய்யக்கொண்டான் ஆற்றில் தீர்த்தவாரி கண்டருளினார். அதன்பின் ஸ்வாமி, அதவத்தூர் ஆற்றங்கரை மண்டபத்துக்குச் சென்றார். அங்கிருந்து இரவு கிளம்பி, வரகாந்திடலை அடைந்து, மண்டகப்படி பெற்று, கீழ வயலூர் தைப்பூச மண்டபத்துக்கு நள்ளிரவு சென்றார். நேற்று அதிகாலை ஒரு மணிக்கு புறப்பட்டு, வடகாபுத்தூர் கிராமத்தை அடைந்தார். அங்கிருந்து, காலை எட்டு மணிக்கு, வடகாபுத்தூரில் இருந்து முத்துக்குமார ஸ்வாமி புறப்பாடானார்.

* ஐந்து சுவாமிகள் சந்திப்பு: இதேபோல, உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர், அல்லித்துறை பார்வதீஸ்வரர், சோழங்கநல்லூர் காசி விஸ்வநாதர், சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன் ஆகிய கிராம சுவாமிகளும் புறப்பாடாகினர். கிராம சுவாமிகளுக்கு முத்துக்குமார சுவாமி சந்திப்பு கொடுத்தார். அதைத்தொடர்ந்து, சோமரசம்பேட்டை நான்கு வீதிகளில், சுவாமிகள் வலம் வந்து, சோமரசம்பேட்டையில் உள்ள தைப்பூச மண்டபத்தை சென்றடைந்தனர். அனைத்து சுவாமிகளும் மண்டபத்தில் தங்கி, இரவு ஏழு மணி வரை பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு 7.30 மணியளவில், அனைத்து சுவாமிகளும் தத்தமது கோவில்களுக்கு புறப்பாடாகினர். திருச்சி மற்றும் அதை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஐந்து சுவாமிகளை ஒரே நேரத்தில் தரிசனம் செய்து பரவசம் அடைந்தனர். ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகார ஸ்வாமி கோவில் உள்ளது. கடந்த, ... மேலும்
 
temple news
திருநீர்மலை; பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், பிரசித்திபெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar