Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புளியம்பட்டி புனித அந்தோணியார் ... 108 சங்காபிஷேக விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை முருகன் கோவில் தைப்பூசத் தேர் நிலை வந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2012
11:02

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் தேர், நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்து, நேற்று மாலை நிலை வந்தடைந்தது. முக்கிய விழாவான மஹாதரிசனம், 11ம் தேதி நடக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் புகழ் பெற்ற முருகன் தலமாக திகழும் சென்னிமலையில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தைப்பூச விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 15 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் கரூர், திருப்பூர், கோவை உட்பட பல மாவட்டங்களில் இருந்தும் குடும்பம் குடும்பமாக காவடி, பால், தயிர் ஆகியவை சுமந்து வருவர். பக்தி பரவசத்துடன், மேளதாளம் முழங்க, சென்னிமலை நகரை வலம் வந்து சென்னிமலை மலை மீதுள்ள முருகனை வணங்கி செல்வர்.
நடப்பாண்டு தைப்பூச விழா ஜனவரி 30ம் தேதி துவங்கியது. அன்று முதல் பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டம் நேற்று முன்தினம் காலை துவங்கியது. சென்னிமலை நகரில் நான்கு ரத வீதிகளையும் திருத்தேர் வலம் வந்து, நேற்று மாலை நிலை சேர்ந்தது. இன்று இரவு பரிவேட்டை குதிரை வாகன காட்சி நடக்கிறது. வெள்ளிக்கிழமை இரவு தெப்போற்சவம் பூதவாகனக் காட்சி நடக்கிறது.
வரும் 11ம் தேதி மஹாதரிசனம் நடக்கிறது. அன்று காலை வள்ளி, தெய்வானை சமதே முத்துகுமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு நடராஜப் பெருமானும். சுப்பிரமணிய ஸ்வாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வருவர். இதைக் காண சென்னிமலையில் லட்சக்கணக்காண பக்தர்கள் கூடுவர். அன்று அதிகாலை 5 மணி வரை ஸ்வாமி திருவீதி உலா நடக்கும். 16ம் தேதி மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் தனபாலன் , செயல் அலுவலர் பசவராஜன் மற்றும் அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகார ஸ்வாமி கோவில் உள்ளது. கடந்த, ... மேலும்
 
temple news
திருநீர்மலை; பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், பிரசித்திபெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar