Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளியம்மன் கோவிலுக்கு திடீர் பூட்டு ... சென்னிமலை முருகன் கோவில் தைப்பூசத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2012
11:02

ஓட்டப்பிடாரம்:புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் தமிழகமெங்கும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டை மறைமாவட்டத்திற்குட்பட்ட புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதி பாளை மறைமாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் 4ம் தேதி வரை காலை 6 மணி, நண்பகல் 12 மணி, மாலை 6.30 மணியளவில் திருப்பலி, செப வழிபாடு, நவநாள் செபம், மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது.

5ம் தேதி மாலையில் பெங்களூர் தூய பேதுரு குருத்துவக் கல்லூரி அருள்தந்தை அந்தோணி தலைமையில் திருப்பலியும், நற்கருணைப் பவனியும் நடந்தன. 6ம் தேதி மாலை பாளை மறைமாவட்ட பங்குத்தந்தை ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலியும், தூத்துக்குடி மறைமாவட்ட பங்குத்தந்தை ஸ்டார்வினின் மறையுரையும் நடந்தது. இரவு புனித அந்தோணியார் சப்பரப் பவனியுடன் வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் ஆலயத் திருவிழா நடந்தது.

அதிகாலையில் பங்குத் தந்தைகள் ஜேம்ஸ் தலைமையில் திருப்பலியும், வியாகப்பராஜின் மறையுரையும், பின்னர் சத்தியநேசன் தலைமையில் திருப்பலியும், ஜெயநாதனின் மறையுரையும், தொடர்ந்து அந்தோணிகுரூஸ் தலைமையில் திருப்பலியும், அம்புரோஸின் மறையுரையும் நடந்தது. காலை அருள் தலைமையில் குணமளிக்கும் வழிபாடு நடந்தது. நண்பகலில் பாளை மறைமாவட்ட முதன்மைக்குரு ஜோமிக்ஸ் தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலியும், மாலையில் பாளையங்கோட்டை தூய சவேரியார் கலைமனைகள், அருள்பணியாளர்கள் திருப்பலியும் நடந்தது. நேற்று (8ம் தேதி) அதிகாலை திருப்பலியும், காலையில் திருப்பலியைத் தொடர்ந்து புனிதரின் திருக்கொடி இறக்கமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலப் பங்குத் தந்தையர்கள் மோயூசன், ஜேம்ஸ், இம்மானுவேல் ஜெகன்ராஜா ஆகியோர் செய்திருந்தனர். விழாவையொட்டி முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar