Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி ஜெயின் கோவில் கொள்ளை ... கம்பனை அறிய ஒரு பிறவி போதாது கம்பனை அறிய ஒரு பிறவி போதாது
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக புத்தகமாகும் திருக்குறள்
எழுத்தின் அளவு:
உலக புத்தகமாகும் திருக்குறள்

பதிவு செய்த நாள்

24 அக்
2018
11:10

சென்னை: திருக்குறளை, உலகப் புத்தகமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், பாண்டியராஜன் பேசினார்.சென்னை, எழும்பூரில் உள்ள, தமிழ் வளர்ச்சி வளாகத்தில், உலகத் தமிழ் சங்கத்தின் சார்பில், வி.ஜி.பி.சந்தோஷம் அமைத்த, வள்ளுவர் சிலையை, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், பாண்டியராஜன், தமிழக மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர்.நிகழ்ச்சியில், அமைச்சர், ஜெயக் குமார் பேசியதாவது:திருக்குறளில், அரசர், அமைச்சர், குடிமக்களுக்கான பண்புகள், இயற்கை பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்த அனைத்து கருத்துகளும் உள்ளன. திருக்குறளை முழுமை யாக படித்தவனே, முழு மனிதன்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மூன்று தமிழுடன், கணினித் தமிழ் என்ற, நான்காம் தமிழையும் வளர்த்தார். நான், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த போது, தமிழ் இணைய கல்விக்கழகத்தையும், மாநாட்டையும் நடத்தினோம்.

இவ்வாறு அவர் பேசினார்.தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், பாண்டியராஜன் பேசியதாவது: வி.ஜி.பி.சந்தோஷம், உலகம் முழுவதும், திருவள்ளுவர் சிலையை நிறுவி வருகிறார். தமிழ் வளர்ச்சி துறையுடன் இணைந்து, 40 சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.தமிழ் மொழி, கலை, கலாசாரம், தொல்லியல் துறைகளை, ஒரு குடையின்கீழ் கொண்டுவர, முதல்வர் உதவினார். தமிழ் பல்கலையின் வளர்ச்சிக்கு, 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழ் வளர் மையங்கள், பண்பாட்டு மையங்கள், சொற்குவை உள்ளிட்ட, 15 புதிய திட்டங்கள், தமிழ் மொழி யின் வளர்ச்சிக்கு உதவும். திருக்குறளை, உலகப் புத்தகமாக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர், விஜய ராகவன், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar