Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கேரள முதல்வர் பினராயி மிரட்டல்: ... மதுரை இஸ்கான் கோயிலில் தாமோதர தீபத் திருவிழா துவக்கம் மதுரை இஸ்கான் கோயிலில் தாமோதர தீபத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐப்பசி பவுர்ணமி சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
ஐப்பசி பவுர்ணமி சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்

பதிவு செய்த நாள்

25 அக்
2018
11:10

திண்டுக்கல்: ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, திண்டுக்கல், பழநி உட்பட பல்வேறு பகுதியிலும் சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. ஆண்டுதோறும் ஐப்பசிமாத பவுர்ணமியில், சிவன் கோயில்களில் உலக நலனுக்காகஅன்னாபிஷேகம் செய்வது வழக்கம்.

நேற்று ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு திண்டுக்கல் அபிராமிஅம்மன் கோயில், சித்திவிநாயகர் கோயில்களில் அன்னாபிேஷகம் நடந்தது.பழநி பெரியாவுடையார் கோயில், புதுநகர் யோகஸ்வரர், மற்றும் இடும்பன்மலை அருகேயுள்ள பஞ்சமுக பிரபஞ்சநாதர் கோயிலில் சிவலிங்கம், முருகருக்கு அன்னத்தால் அபிஷேகமும், சர்ப்ப ஜடாதாரி அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.

பழநி மதனபுரம் அண்ணாமலையார் உண்ணாமுலை நாயகி கோயில், நேதாஜிநகர் காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் போன்ற  கோயில்களிலும்சிறப்பு அலங்காரம் செய்து,அன்னாபிஷேகம் நடந்தது.

கன்னிவாடி:  கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் மூலவர், உற்சவர், நந்திக்கு 30 வகை திரவிய அபிேஷகம் நடந்தது. தேவார, திருவாசக பாராயணத்துடன், சிறப்பு பூஜைகள் நடந்தது. கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயிலில், சிறப்பு அபிேஷகம் நடந்தது. முன்னதாக, ஓம்கார விநாயகர், நந்தி, சோமலிங்கசுவாமிக்கு பல்வேறு திரவிய அபிேஷகம் நடந்தது.

நத்தம்:  நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் மூலவர் சிவலிங்கத்திற்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிேஷகங்கள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் அன்னாபிேஷகம் நடந்தது. கைலாசநாதர் மற்றும் செண்பகவள்ளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

கள்ளிமந்தையம்: கள்ளிமந்தையம் அருகே கூத்தம்பூண்டி ஆனந்தவள்ளி உடனமர் மார்க்கண்டேஸ்வரர் கோவிலில் காலையில் விநாயகர் வழிபாடு, கலச ஆஹாசனம் நடந்தது. திரவ்ய அபிேஷகம், அன்னதான அபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின்பு நாளை அதிகாலை ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி அருகே போகலூர் ஒன்றியம் அரியகுடிபுத்தூர் கிராமத்தில் அம்மன் கோயில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. பழநிக்கு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar