Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயிலில் தீத்தடுப்பு பயிற்சி சபரிமலை தீர்ப்பு: குமரியில், பந்த் சபரிமலை தீர்ப்பு: குமரியில், பந்த்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் கிடந்த ரூ.34 ஆயிரம்: தவறவிட்டவரிடம் ஒப்படைத்த தம்பதி
எழுத்தின் அளவு:
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் கிடந்த ரூ.34 ஆயிரம்: தவறவிட்டவரிடம் ஒப்படைத்த தம்பதி

பதிவு செய்த நாள்

25 அக்
2018
02:10

திருச்சி: ஸ்ரீரங்கம் கோவிலில் கிடந்த, 34 ஆயிரத்து, 500 ரூபாயை கண்டெடுத்த தம்பதி, தவறவிட்டவரிடம் ஒப்படைத்தனர்.

திருச்சி, கே.கே.நகரைச் சேர்நத தம்பதி ரவி தேவி. இவர்கள் நேற்று 24ல் காலை , ஸ்ரீரங்கத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவிலுக்கு, மகளின் திருமண பத்திரிக்கையை சாமியிடம் வைத்து கும்பிட சென்றனர். பைக்கில் சென்ற அவர்கள், கோவில் முன் நிறுத்திய போது, அங்கு, 2,000 500 ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்து உள்ளன. உடன், ஆதார் கார்டு, ஏ.டி.எம்., ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் ஆகியவையும் கிடந்துள்ளன. அவற்றை எடுத்து பார்த்தபோது, 34 ஆயிரத்து, 500 ரூபாய் பணம் இருந்துள்ளது. ஆதார் கார்டு மூலம், அந்த பணத்துக்கு சொந்தக் காரர், மணப்பாறை அருகேயுள்ள புத்தாநத்தத்தைச் சேர்ந்த ஆண்டியப்பன் என்று தெரிய வந்தது. பணத்தை தம்பதி, ஸ்ரீரங்கம் போலீசில் ஒப்படைக்க முடிவு செய்து, சிறிது நேரம் அங்கேயே நின்று, யாரும் வருகின்றனரா என்று பார்த்துள்ளனர். அப்போது, 50 வயது மதிக்க த்தக்க ஒருவர், பணத்தை காணோம் என்று அங்கு வந்து உள்ளார். அவரிடம் விசாரித்த போது, பணத்தை தவறவிட்ட ஆண்டியப்பன் என்று தெரியவந்தது. இதையடுத்து பணம் மற்றும் ஆவணங்களை, தம்பதி ஒப்படைத்தனர்.அதை கண்ணீர் மல்க பெற்றுக் கொண்ட அவர், தம்பதிக்கு நன்றி தெரிவித்து சென்றுள்ளார். அங்கிருந்தவர்கள், தம்பதியை பெரிதும் பாராட்டினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் ... மேலும்
 
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar