பதிவு செய்த நாள்
25
அக்
2018
02:10
ஈரோடு: கோபிசெட்டிபாளையம் ஸ்ரீபல்லி மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 16ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. வரும், 30ல் தீர்த்தம் எடுத்து வருதல், மாலை அலங்கார பூஜை, இரவு திருவீதி உலா, 31ல், மாவிளக்கு, பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், நவ.,1, இரவு மஞ்சள் நீராட்டு, நவ.,2ல் பகல் 12 மணிக்கு, மறு பூஜை நடக்கிறது. இந்த திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, மாரியம்மனின் அருளை பெற வேண்டும் என, விழா குழுவினர் சார்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது.