கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் சத்சங்கத்தில் பவுர்ணமியையொட்டி திரை நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது.கண்டாச்சிபுரம் சத் சங்கத்தில்,பவுர்ணமியையொட்டி நேற்று (அக்., 24ல்) காலை 10:00 மணிக்கு அகவல் பாராயணம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஓதுவார்கள் கலந்துகொண்டு அருட்பா பாடினர். தொடர்ந்து திரைநீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. பின்னர் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்ச்சியாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.