கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் என்னும் தலத்தில் அமைந்துள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் ராஜகம்பீரான் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள துர்க்கை மூன்று தலைகளும் எட்டுக் கரங்களும் கொண்டு வெகு அழகாக காட்சி தருகிறார். மூன்று தலைகள் உள்ளதால் லட்சுமி, சரஸ்வதி, மகேஸ்வரி என்ற முப்பெருந்தேவியர் இணைந்த அபூர்வ கோலம் என இத்தேவி போற்றி வணங்கப்படுகிறாள்.