Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழந்தின்னி வவ்வால் இனங்களை ... கொடும்பாளூர் கோவிலில் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு கொடும்பாளூர் கோவிலில் கல்வெட்டுகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழிவின் விளிம்பில் 800 ஆண்டு பழமையான சிவன் கோவில்
எழுத்தின் அளவு:
அழிவின் விளிம்பில் 800 ஆண்டு பழமையான சிவன் கோவில்

பதிவு செய்த நாள்

03 நவ
2018
11:11

சிக்கல்:  ராமநாதபுரம் மாவட்டத்தில், 800 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில், தொல்லியல் துறையின் அலட்சியத்தால், சிதிலமடைந்து, அழிவின் விளிம்பில் உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில், சிக்கல் அருகே உள்ளது, மேலக்கிடாரம் கிராமம். இங்குள்ள, திருநாகேஸ்வரர் கோவில் கி.பி., 1236ல், மாறவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரபாண்டினால் கட்டப்பட்டது. இங்கு, ஐந்து ஏக்கரில் கோவில் குளம் அழகுற அமைந்துள்ளது. 60 அடி நீளத்தில், கோவில் பிரகாரம், கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், முகப்பு மண்டபம் அமைந்துள்ளது.

கருவறையின் மேல்தளம் சிறிய அளவிலான செங்கற்களால் பிரமிடு வடிவில் கட்டப்பட்டுள்ளது. கருவறையின் மேல், கலசம் இல்லாமல், பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. வெளிப்புற சுவர்களில், வட்ட வடிவ, சித்திர தமிழ் எழுத்துக்களால் ஆன கல்வெட்டுக்கள் உள்ளன. அதில், இவ்வூரின் பெயர், மூலவரின் பெயர், தானத்தின் தன்மை, தானப்பொருள், பிற ஊர்களின் பெயர்கள் தெளிவாக உள்ளது.

தொல்லியல் ஆர்வலர், எம்.எஸ்.கே.பாக்கியநாதன் கூறியதாவது: தொல்லியல் துறையால் ஆய்வு செய்யப்பட்ட இக்கோவில் அருகே, 2000 ஆண்டுகளுக்கு முந்தைய, கருப்பு, சிவப்பு, வண்ண பானை ஓட்டுச்சில்லுகள் கண்டறியப்பட்டு, அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டை படியெடுத்து வைத்துள்ளோம். பிரிட்டிஷ் அரசால், 1905ல் வெளியிடப்பட்ட, பழமையான கோவில்கள் குறித்த வரலாற்று ஆவணத்தில், இக்கோவிலும் இடம்பெற்றுள்ளது. சிவராத்திரியன்று, காலை, 7:00 முதல், 9:00 மணி வரை, மூலவர் சிவலிங்கத்தின் மீது, சூரிய ஒளி நேரடியாக விழும்.

அழிவின் விளிம்பில்: மழை பெய்தால், கோவில் கோபுர கலசங்களின் வழியாக, மழைநீர், மூலவர் சிவலிங்கத்தின் மீது கொட்டுகிறது. 2016 செப்.,ல் ‘தினமலர்’ நாளிதழ் செய்தி எதிரொலியாக, இந்துசமய அறநிலையத்துறை, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில், கோவில் வந்தது. ஆனால், இதுவரை எந்த பராமரிப்பு பணிகளும் செய்யாததால், 800 ஆண்டு பழமைவாய்ந்து இக்கோவில் சிதிலமடைந்து அழிவின் விளிம்பில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar