Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகங்கையில் ஹனுமந்தராய கோயிலில் ... காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், நுழைவாயிலை மறித்து கோவிலில் அன்னதானம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புல்லாணி சக்கர தீர்த்த குளம் மக்கள் முயற்சியால் நிரம்பி வருகிறது
எழுத்தின் அளவு:
திருப்புல்லாணி சக்கர தீர்த்த குளம் மக்கள் முயற்சியால் நிரம்பி வருகிறது

பதிவு செய்த நாள்

10 நவ
2018
12:11

ராமநாதபுரம்:திருப்புல்லாணி சக்கர தீர்த்த குளம் மக்கள் முயற்சியால் நிரம்பி வருகிறது. ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியில் நிலத்தடி நீர் மேம்பாட்டிற்காக பிள்ளையார் குட்டம் ஊரணி, மதகு குட்டம் ஊரணி, கூத்தியார் குட்டம் ஊரணி, சக்கர தீர்த்த குளம் அமைக்கப் பட்டுள்ளன. இவை அனைத்தும் மழை நீரால் நிரம்ம் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

காலப்போக்கில் ஆக்கிரமிப்பாலும், வரத்து கால்வாய்கள் தூர்ந்து போனதாலும் மதகு குட்டம் ஊரணி, சக்கர தீர்த்த குளத்திற்கும் நீர் வரத்து சுத்தமாக நின்று போனது. கடந்த மூன்றாண்டு களாக ஏற்பட்ட வறட்சியால் முற்றிலும் ஊரணிகள் வறண்டதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு மக்கள் திண்டாடினர்.

தற்போது மக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு, இளைஞர்கள் ஆர்வத்துடன் ஊரணியில் நீர் தேக்க முயற்சி செய்தனர். மழை உபரி நீரை பெரிய கிணற்றில் சேமித்து, அங்கிருந்து மூன்று
ராட்சத மோட்டாரில் ஊரணிக்கு பம்பிங் செய்கின்றனர்.

இங்கிருந்து மதகு குட்டம் ஊரணிக்கு செல்லும் வகையில் ஊராட்சி நிர்வாகம் கால்வாய் அமைத்துள்ளது.தற்போது மதகு குட்டம் ஊரணி நிரம்பி அதிலிருந்து உபரி நீர் சக்கர தீர்த்த குளத்திற்கு சென்று வேகமாக நிரம்பி வருகிறது.

கே.ராமச்சந்திரன்,52, திருப்புல்லாணி: மூன்று ஆண்டுகளாக வறண்ட நிலத்தடி நீரை பாதுகாக்க மக்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் உபரி மழை நீரை சேமிக்க திட்டமிட்டனர். ஊராட்சி நிர்வாகம் உதவியது.

இந்த முயற்சியால் தற்போது மதகு குட்டம் ஊரணி நிரம்பி, சக்கர தீர்த்த குளம் நிறைந்து வருகிறது. எஸ்,தேவேந்திரன்,55, திருப்புல்லாணி: மதகு குட்டம் ஊரணி, சக்கர தீர்த்த குளத் திற்கு வரத்து கால்வாய் இல்லாத நிலையில் தற்காலிக ஏற்பாடாக மோட்டாரில் தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. நிரந்தர கால்வாய் அமைக்க மாவட்ட நிர்வாகம்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar