பதிவு செய்த நாள்
23
நவ
2018
11:11
நவம்பர் 23, 1926: சத்ய சாய் பாபா ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில், 1926 நவ., 23ல் பிறந்தார். ஆன்மிகவாதியான இவர், சத்யசாய் பாபா நிறுவனம் மூலம், இலவச மருத்துவ நிலையம், பாட சாலை, உயர்கல்வி நிலையம், கிராமங்களுக்கு குடிநீர் திட்டம் போன்ற, பல சமூகநல திட்டங்களை ஏற்படுத்தி தந்தவர்.உலகம் முழுவதும், 136 நாடுகளில், சாய் பாபா நிறுவனங்கள் செயல்படுகின்றன. சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தில், ஆந்திர மாநிலம், அனந்தபூர் மற்றும் வடக்கு, கிழக்கு கோதாவரி மாவட்டங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை, சத்யசாய் மைய அறக்கட்டளை வழங்கி உள்ளது.சென்னை மக்களின் தாகம் தீர்க்க, தமிழகம் மற்றும் ஆந்திர அரசுகளால் முயற்சி மேற்கொள்ளப்பட்டது; ஆனால், அது தோல்வியடைந்தது. தெலுங்கு -- கங்கை திட்டத்தை சீர் செய்து, சென்னை மக்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கியவர், சத்யசாய் பாபா. 2011 ஏப்., 24ல், இயற்கை எய்தினார். அவர் பிறந்த தினம் இன்று.