Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் 20ம் தேதி ... மீனாட்சி அம்மன் கோயிலில் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் என்ன? மீனாட்சி அம்மன் கோயிலில் இன்னும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தினமலர் செய்தி எதிரொலி: மணவாளப்பெருமாள் கோயிலில் திருப்பணி துவங்கியது!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 பிப்
2012
10:02

வத்திராயிருப்பு :வத்திராயிருப்பு அருகே அழகிய மணவாளப்பெருமாள் கோயில் புதுப்பிக்கும் பணி,"தினமலர் செய்தி எதிரொலியாக, பாலாலய வைபவத்துடன் துவங்கியது. வத்திராயிருப்பு அருகே அர்ஜூனா நதிக்கரையில், அழகிய மணவாளப் பெருமாள் கோயில் உள்ளது. இப்பகுதியை ஆண்ட மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்ற மன்னரால் புனரமைக்கப்பட்டது. மன்னன் சைவ சமயத்தை வளர்த்த போதிலும் ,அதற்கு ஈடாக வைணவ மதத்தையும் போற்றி பாதுகாத்தார் என்பதற்கு ,இக்கோயில் சான்றாக உள்ளது. அதை மெய்ப்பிக்கும் வகையில், அழகிய கலைநயம் மிக்க சிற்பங்கள், தூண்கள் உள்ளன. 10 ஏக்கரில் கோயிலும், அதன் எதிரே உபன்யாச மண்டபமும் அமைந்துள்ளது. நீண்ட ஆண்டுகளாக பராமரிப்பில்லாததால், உத்திரக்கற்களும், சுற்றுச்சுவர் கற்களும் பெயர்ந்தன. பக்கவாட்டு சுவர்கள் சரிந்தன. கோயில் கருவரை, கோபுரம் உட்பட அனைத்து பகுதிகளும் சிதைந்து, புதர்மண்டியது. இங்கு பக்தர்கள், ஆபத்தான நிலையிலும் வழிபட்டு வந்தனர். சிறப்புமிக்க இதன் கோயில், தனது வரலாற்று பதிவுகளை இழந்து, மண்ணோடு மண்ணாகியது பக்தர்களை மிகுந்த வேதனையடைய செய்தது. இது தொடர்பாக, 2011 டிச. 12 "தினமலர் இதழிலில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, கோயிலை புதுப்பிக்க, அறநிலையத்துறை, பக்தசபை இணைந்து, ரூ. 1.50 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரித்தனர். அறநிலையத்துறையானது இதற்காக முதல்கட்டமாக ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்தது. மேலும் பக்தர்கள், நன்கொடை உதவியுடன் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பாலாலயம் அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் முன்னிலையில் நடந்தது. மூலவர் சிலையிலிருந்து சக்தி எடுக்கப்பட்டு, உற்சவருக்கு ஏற்றப்பட்டது. மூலவர் சிலை இடமாற்றம் செய்யப்பட்ட பின், சிற்பங்களுக்கும், கட்டுமான கற்களுக்கும் எண் குறிப்பிடும் பணிகள் நடந்தன. பக்தசபா அமைப்பாளர் குமார், அறநிலையத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar