ராமநாதபுரம்:ராமநாதபுரம் புனித சவேரியார் சர்ச் திருவிழா ராமநாதபுரத்தில்நடந்தது. கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா, தேர்பவணி, திருவிழா திருப்பலி உள்ளிட்ட விழாக்கள் நடந்தது. பங்கு தந்தை அருள் ஆனந்த், உதவிப்பங்குத்தந்தை ஜேசு ரட்சகர் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டு அருளாசி வழங்கினர். ஏற்பாடுகளை குழந்தைச்சாமி செய்திருந்தார்.