அன்னூர்:குன்னத்தூர் ஊராட்சி, நாதேகவுண்டன்புதூர், சித்தி விநாயகர் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.இதையடுத்து, கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா நேற்று (டிசம்., 2ல்) நடந்தது. மதியம், மகா கணபதி ஹோமமமும், மூல மந்திர ஹோமமும் நடந்தது. பின்னர், சித்தி விநாயகருக்கு மகா அபிசேகம் செய்யப்பட்டு, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. குன்னத்தூர் சுற்றுவட்டார மக்கள் பங்கேற்றனர்.