வருஷநாடு: வருஷநாடு அருகே தர்மராஜபுரத்தில் உள்ள பழமையான மாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றதாகும். இங்கு வெள்ளிதோறும் வழக்கமான பூஜைகளும், நவராத்திரி, ஆடி உள்ளிட்ட விழாக்காலங்களில் சிறப்பு அபிஷேகம், பூஜை நடக்கிறது.
கோடை காலங்களில் வைகை ஆற்றில் தண்ணீர் இல்லாத போது அம்மனை வழிபட்டால் மழையால் நீர் வரத்து ஏற்படும். குழந்தை பாக்கியம், மன அமைதி, தொழில் வெற்றி கிடைப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர். அம்மனை மனமுருகி வேண்டினால் நினைப்பது நடக்கிறது. எதிலும் வெற்றி கிடைக்கிறது என்பது நம்பிக்கை. ஆண்டு தோறும் சித்திரையில் கோயிலில் திருவிழா நடத்தப்படும். ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தவர்.