Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1,008 கோ பூஜை வழிபாடு : பொங்கலூரில் ... மூணாறில் கோயில் திருவிழாக்கள் கோலாகலம் மூணாறில் கோயில் திருவிழாக்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேறு வழியில் விஸ்வரூப கோதண்டராமர் சிலை
எழுத்தின் அளவு:
வேறு வழியில் விஸ்வரூப கோதண்டராமர் சிலை

பதிவு செய்த நாள்

25 டிச
2018
11:12

செஞ்சி: பெங்களூரு செல்லும், விஸ்வரூப கோதண்டராமர் சிலையை, செஞ்சி கோட்டை வழியாக இல்லாமல், வேறு வழியில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். கர்நாடக மாநிலம், பெங்களூரு ஈஜிபுரத்தில், 108 அடி உயரத்தில், 11 தலைகளுடன், விஸ்வரூப கோதண்டராமர் சிலை பிரதிஷ்டை செய்ய உள்ளனர்.

இதற்காக வடிவமைத்த, 64 அடி நீளமுள்ள சிலையின் மைய பகுதியான கோதண்டராமர் சிலையை, திருவண்ணாமலை மாவட்டம், அகரகொரகோட்டையில் இருந்து, பிரமாண்டமான லாரியில் எடுத்துச் செல்கின்றனர்.இந்த சிலை, கடந்த 18ம் தேதி இரவு செஞ்சிக்கு வந்தது. செஞ்சி கோட்டை வழியாக செல்லும்போது, கோட்டை மதில்கள் அமைந்த பகுதியில், சாலை குறுகலாக இருந்ததால், சிலையின் பக்கவாட்டில் கூடுதலாக இருந்த பாறைகளை, 21ம் தேதி வெட்டி அகற்றினர்.இதன் பிறகு நடந்த ஆய்வில், செஞ்சியிலும் அடுத்துள்ள பகுதிகளிலும், 65க்கும் மேற்பட்ட இடங்களில் மின் கம்பங்கள் அகற்ற வேண்டியது தெரிய வந்தது. இந்த பணியால், சிலையை கொண்டு செல்ல மேலும் சில நாட்களாகும். கூடுதல் செலவும் ஏற்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையால் செஞ்சி பகுதி சாலையில், பல இடங்களில் சேறும், சகதியுமாக உள்ளது. எனவே, சிலையை இந்த வழியில, எடுத்து செல்வது பாதுகாப்பானதாக இருக்காது என்பதால், மாற்று வழி குறித்து ஆய்வு செய்து, சேத்துப்பட்டு - அவலுார்பேட்டை வழியாக திருவண்ணாமலை செல்வது என முடிவு செய்தனர்.சேத்துப்பட்டு, திருவண்ணாமலை சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது. இந்த வழியில் செல்ல, விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மூலம் அனுமதி கேட்டுள்ளனர். அனுமதி கிடைத்ததும், இன்று அல்லது நாளை சிலையை செஞ்சியில் இருந்து கொண்டு செல்ல உள்ளனர்.இதையடுத்து, சேத்துப்பட்டு சாலையை சரி செய்யும் பணியை, சிலை அமைப்பு குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar