Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெண்களால் சபரிமலையில் மீண்டும் ... உத்தர பிரதேச மாநிலத்தில் கும்பமேளா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருப்புக்கோட்டையில் நூற்றாண்டை கடந்த சி.எஸ்.ஐ., தேவாலயம்
எழுத்தின் அளவு:
அருப்புக்கோட்டையில் நூற்றாண்டை கடந்த சி.எஸ்.ஐ., தேவாலயம்

பதிவு செய்த நாள்

25 டிச
2018
01:12

அருப்புக்கோட்டை : நூற்றாண்டை கடந்த அருப்புக்கோட்டை சி.எஸ்.ஐ., சர்சில் இன்று டிச 25 ல் , கிறிஸ்மஸ் விழா கோலகலமாக கொண்டாடப்படுகிறது.

அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் உள்ளது சி.எஸ்.ஐ., சர்ச். 1918 ல் அடிக்கல் நாட்டப்பட்ட இது சாதி, மதம் கடந்து அனைத்து மக்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது . தேவாலயம் கட்ட 20 ஆயிரம் ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்படிருந்தாலும் 23 ஆயிரத்து 565 ரூபாய் 2 அனா, 10 பைசா செலவு ஆனது. இன்ஜினியர் லாசன் சர்சை சிலுவை வடிவம் போல் வரைபடம் அமைக்க அதன்படி கட்டப்பட்டது.

தேவாலயத்தின் திருமேடைக்கு மேல் அமைந்துள்ள வண்ண ஒவியக் கண்ணாடி அமெரிக்கா வின் பாஸ்டன் நகரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது. இதில் இயேசு கிறிஸ்துவின் முழு உருவப்படம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய கட்டட கலை நுணுக்கத்துடன் அமைந்துள்ள இதில்,திராட்சை தோட்டத்திற்குள் நின்று கொண்டு கருணை கண்களோடு நோக்கும் இயேசுவின் முகம் கண்ணாடிக்குப் பின் இருந்து வரும் வெளிச்சத்தை உள்வாங்கி பிரகாசமாக தெரிவது இதன் சிறப்பாகும்.ஆயலத்தின் எங்கிருந்து பார்த்தாலும் இயேசு நம்மையே பார்ப்பது போல இருக்கும். சர்சில் இருக்க கூடிய தேவாலய மணி அமெரிக்கா டிராய் நகரிலிருந்து கொண்டு வரப்பட்டது என்பது தனிசிறப்பு.. இப்புகழ் வாய்ந்த சர்ச்சில் இன்றுடிச 25 ல் , கிறிஸ்துமஸ் விழா கோலகலமாக கொண்டாடப்படுகிறது.

சர்ச் போதகர் எபினேஷர் ஜாஷ்வா கூறுகையில் , ஏழைக்கு இறங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் என்ற வேத வாக்கியத்திற்கு ஏற்ப இந்த திருச் சபை சமுதாய பணியை முன்னெடுத்து செல்கிறது. கிறிஸ்துவின் பிறப்பை முன்னிட்டு இக்கட்டான சூழ்நிலைகளில் பெத்லகேமிற்கு சென்றவர்கள் ஆசிர்வாதத்தை பெற்று கொண்டதை போல், இன்றைக்கும், இனி வரும் நாட்களிலும் இந்த ஆலயத்தை நோக்கி வருபவர்கள் ஆசிர்வாதத்தை பெற்று கொள்வார்களாக, என்றப்படி கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar