Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் ... பக்தர்கள் நலன்வேண்டி பழநியில் சிறப்பு யாகபூஜை பக்தர்கள் நலன்வேண்டி பழநியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாவூற்று வேலப்பர் கோயில் வளாகத்தில் வற்றும் சுனை
எழுத்தின் அளவு:
மாவூற்று வேலப்பர் கோயில் வளாகத்தில் வற்றும் சுனை

பதிவு செய்த நாள்

28 டிச
2018
11:12

ஆண்டிபட்டி: மாவூற்று வேலப்பர் கோயில் சுனையில் நீர் வற்றி வருவதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். தெப்பம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் தேதியில் நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். மாதாந்திர கார்த்திகை, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்வர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தி துாக்கி எரியும் பொருட்கள், குடிமகன்கள் பயன்படுத்திய காலி பாட்டில்கள், பாலிதீன் கழிவு பொருட்கள் போன்றவை வனப்பகுதியில் உள்ள கோயில் வளாகத்தின் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.

ஓங்கி உயர்ந்த மரங்கள், செடிகொடிகள், பல்வேறு மூலிகைகள் கொண்ட இயற்கையான இடமாக இருந்த வேலப்பர் கோயில் வளாகம் கொஞ்சம் கொஞ்சமாக அதன் இயற்கை தன்மையை இழந்து வருகிறது. மருத மரங்களின் வேர் பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனையில் நீராடி வேலப்பரை வழிபடுவதால் தீராத நோய்கள் தீரும் என்பதும், மனக்கவலைகள் மறந்து புத்துணர்வு ஏற்படும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் புனிதமாக கருதும் சுனைநீர் இப்பகுதியில் உள்ள பள்ளத்தில் தேங்கி நிற்கும். பக்தர்கள் பலர் குளித்தாலும், தொடர்ந்து கொட்டி வந்த நீரால் பள்ளத்தில் தேங்கும் நீரும் சுத்தமாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் படிப்படியாக குறைந்து வந்த சுனை தற்போது வற்றி வருகிறது. லேசான நீர் கசிவு மட்டுமே தற்போது உள்ளது. இதனால் பக்தர்கள் சுனைநீரில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளத்தில் தேங்கி நீரை தொடர்ந்து பயன்படுத்துவதால், அசுத்தமடைகிறது. வேலப்பர் கோயில் வளாகத்தில் வற்றிய சுனை பக்தர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. அடர்ந்த வனப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தொடரும் வறட்சியும், இயற்கையான சூழலுக்கு மதிப்பு தராமல், கோயிலுக்கு வந்து செல்பவர்களின் செயல்பாடுகள்தான் பாதிப்புக்கான காரணம் என்று இப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar