Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரி அமாவாசை பூஜையில் செக் ... சுனை தண்ணீரில் புதைந்த சிவலிங்கம்: 162 ஆண்டுக்கு பின் பக்தர்கள் தரிசனம் சுனை தண்ணீரில் புதைந்த சிவலிங்கம்: 162 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை சென்றது விஸ்வரூப கோதண்டராமர் சிலை
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை சென்றது விஸ்வரூப கோதண்டராமர் சிலை

பதிவு செய்த நாள்

05 ஜன
2019
11:01

அவலுார்பேட்டை: விழுப்புரம் மாவட்டம், கப்ளாம்பாடியில் மூன்று நாட்களாக, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, விஸ்வரூப கோதண்டராமர் சிலை, நேற்று அவலுார்பேட்டை வழியாக, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்றது.பெங்களூரு, ஈஜிபுரத்தில் நிறுவுவதற்காக, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அகரகொரக்கோட்டை கிராமத்தில், 64 அடி உயரத்தில், 3 லட்சம் கிலோ எடையில் வடிவமைக்கப்பட்ட விஸ்வரூப கோதண்டராமர் சிலை, கார்கோ லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது.

இழப்பீட்டு தொகைஇந்த சிலை, 1ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட்டிலிருந்து புறப்பட்டு, விழுப்புரம் மாவட்டம், கப்ளாம்பாடி கிராமத்திற்கு, மாலை, 3:00 மணிக்கு வந்தது. பயணத்தை தொடர இடையூறாக உள்ள வீடுகளை இடிக்க வேண்டியிருந்ததால், சிலை கப்ளாம்பாடி கிராமத்திலேயே நிறுத்தப்பட்டது.அதைத் தொடர்ந்து சிலை அமைப்பு குழுவினர், சிலை செல்ல இடையூறாக இருந்த வீடுகள் மற்றும் கடை உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தி, அவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கினர். பின் கப்ளாம்பாடி, அவலுார்பேட்டையில், தலா, ஒரு வீடும், குந்தலம்பட்டில் ஒரு கீற்றுக்கொட்டகையும், கப்ளாம்பாடியில், இரண்டு மின் கம்பங்களும் அகற்றப்பட்டன. டயர் வெடித்ததுசாலை வளைவுகளில் மண் கொட்டி சீரமைத்ததை தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு பின், நேற்று காலை,10:40 மணிக்கு கப்ளாம்பாடியிலிருந்து சிலை புறப்பட்டது. 11:20க்கு குந்தலம்பட்டு கிராமத்தில் உள்ள சாலை வளைவில், கார்கோ லாரி வர முடியா மல் நின்றது. இரண்டு இடங் களில் டயர் வெடித்தது. சாலை வளைவு பகுதியில், மேலும் மண் கொட்டி சீரமைத்த பின், மாலை, 3:50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, அவலுார்பேட்டை வழியாக மாலை, 5:00 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம், வேடந்தவாடி கிராமத்திற்கு சென்றடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; வாணியந்தல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள  வள்ளி தேவசேனா சமேத செங்கல்வராய ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அர்ச்சுனாபுரத்தில் நல்லதங்காள் கோயிலில் ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்; திருக்கழுக்குன்றத்தில், துார் வாரப்படும் கோவில் குளத்தில் கிடந்த நந்தி சிலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar