Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கைலாசநாதர் கோவிலில் கண்ணப்ப நாயனார் ... தர்மபுரி கோவில்களில் பிரதோஷத்தையொட்டி நந்திக்கு பூஜை தர்மபுரி கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

19 ஜன
2019
12:01

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கற்குவியலில் கி.பி.,14ம் நுாற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. திருவாடானை அருகே திருத்தேர்வளையில் சேதமடைந்த பழைய சிவன் கோயிலில் அகற்றப்பட்ட கற்கள், கல் துாண்கள் கோயிலை சுற்றி போடப்பட்டுள்ளன. இவற்றை ஆய்வு செய்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுரு, ஒருங்கிணைப்பாளர் மோ.விமல்ராஜ் ஆகியோர் பாண்டியர் கால கல்வெட்டு ஒன்றை கண்டுபிடித்தனர். தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கூறியதாவது: கருங்கற்களை கொண்டு கட்டப்பட்ட கோயில் விமானத்தின் கூம்பு வடிவ பகுதியில் இக்கல்வெட்டு இருந்துள்ளது. மன்னர் பெயர் இல்லை. 13 வது ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டுள்ளது. காளையார்கோவிலின் முந்தைய பெயரான திருக்கானபேர்கூற்றம் என்ற பெயர் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. மேலும் கல்வெட்டில், திருத்தேர்வளை கோயில் இறைவனுக்கு வழங்கப்பட்ட இத்தானத்தை காத்தவன் புண்ணியம் பெறக்கடவான்.

இவர்களின் ஸ்ரீபாதங்கள் திருத்தேர்வளை இறைவனால் காத்து ரட்சிக்கப்படவேணும். இதுக்கு விரோதம் செய்தால், மஹாதோஷத்தில் போவார், எனவும் சொல்லப்பட்டுள்ளது. இவ்வூர் அருகில் உள்ள ஆனந்துார் சிவன் கோயிலில் கி.பி., 1323ம் ஆண்டை சேர்ந்த சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கல்வெட்டு உள்ளது. இதுவும் கி.பி.,14ம் நுாற்றாண்டை சேர்ந்தது. ஆனந்துார் கல்வெட்டில் திருத்தேர்வளையை சேர்ந்த வணக்கு செட்டியார் என்பவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பழமையான கோயில்களை அதன் பழமை மாறாமல், புதுப்பித்து பாதுகாக்க வேண்டும். இது போன்று உடைத்து போடப்பட்ட கற்களில் உள்ள வரலாற்று சாசனங்களை, அரசும், மக்களும் பாதுகாக்க வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிரகங்களிலேயே செவ்வாய்க்கு தெய்வத்தன்மை அதிகம். சிவனின் அம்சமான வீரபத்திரரே, செவ்வாய் கிரகமாக ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோயிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
கோவை; தாமஸ் வீதி - தெலுங்கு வீதி சந்திப்பில் அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்பு ... மேலும்
 
temple news
திருப்பூர்; ‘‘இறைவன் திருவடியைப் பற்றி, அவரது திருவடியை அடைய வேண்டுதல் வைக்க வேண்டும்,’’ என, வேளுக்குடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar