Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தலைவாசல் முருகன் கோவிலில், காவடி ... சேலம் முருகன் கோவில்களில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரபாண்டியில் திருக்கல்யாணம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2019
04:01

வீரபாண்டி: தைப்பூச திருவிழாவையொட்டி, வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சென்னகேசவ பெருமாளுக்கு திருமணம் நடந்தது. சீரகாபாடி, திருமயிலாடகிரி, சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா, கடந்த, 15ல் முகூர்த்த கம்பம் நடுதலுடன் தொடங்கியது. நேற்று (ஜன., 20ல்) காலை, விநாயகருக்கு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, மாப்பிளை அழைப்பு ஊர்வலம், மாரியம்மன் கோவிலில் தொடங்கி, மலைக்கோவிலை அடைந்தது.

மாங்கல்ய பூஜை முடிந்து, வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர்; ஸ்ரீதேவி, பூதேவியருடன் சென்னகேசவ பெருமாளுக்கு, சிவாச்சாரியார்களால், திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திரளான பக்தர்கள், தரிசனம் செய்தனர். மாலை, திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டு, மின்விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், மணக்கோலத்தில் சுவாமிகள் வீதி உலா வந்தனர். இன்று, (ஜன., 21ல்)தேரோட்டம் நடக்கிறது. அதற்காக, மாரியம்மன் கோவில் திடலில், விநாயகர், சுப்ரமணியர், பெருமாள் சுவாமிகளுக்கு, பாரம்பரிய முறைப்படி, மூங்கில், சவுக்கு, வைக்கோலால் தேர் கட்டும் பணி நடந்துவருகிறது.

மற்ற தேர்களை போல் இல்லாமல், வெறும் மூங்கில், சவுக்கு கட்டைகளை, வைக்கோலால் கட்டி, இரு மாட்டு வண்டிகளுக்கு மத்தியில், நீளமான தேக்கு மரத்தின் மேல் கட்டப்பட்ட தேரை இணைத்து, வடம் அமைத்து, பக்தர்கள் இழுத்துவருவர். இக்கோவில் பெருமாள் தேரில், செங்கோடம்பாளையம் மலைக்கோவிலிலிருந்து அழைத்து வரப்படும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாய பெருமாள், ஆண்டுதோறும் இங்கு வந்து தேரோட்டத்தில் கலந்து கொண்டு செல்வது மற்றொரு சிறப்பு. மாலை, 4:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் மூன்று தேர்களில், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாய பெருமாள் சுவாமிகளை எழுந்தருளச்செய்வர்.

இரவு, 7:00 மணிக்கு தேரோட்டம் நடக்கும். நாளை (ஜன., 22ல்) இரவு, சத்தாபரணம், நாளை மறுநாள் கொடி இறக்குதல், மஞ்சள் நீராட்டு வைபவத்துடன், விழா நிறைவடையும். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, தக்கார் புனிதராஜ், ஊர்மக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதை தொடர்ந்து மூவாயிரம் போலீசார் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் இன்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடந்தது.கோவையில் ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு காவடி ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar