Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோலைமலை முருகன் கோயிலில் தைப்பூசம் பழநி மலைக்கோவிலில் பூக்களால் அலங்காரம் பழநி மலைக்கோவிலில் பூக்களால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பமேளாவில், ராம நாம வங்கி
எழுத்தின் அளவு:
கும்பமேளாவில், ராம நாம வங்கி

பதிவு செய்த நாள்

22 ஜன
2019
10:01

பிரயாக்ராஜ்: உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடந்து வரும், கும்ப மேளாவில் அமைந்துள்ள, ராம நாம வங்கி, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. உத்தர பிரதேசத்தில், முதல்வர், யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள, பிரயாக்ராஜில், கும்பமேளா நடந்து வருகிறது. இந்த கும்பமேளாவில் அமைந்துள்ள, ராம நாம வங்கி, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரயாக்ராஜை சேர்ந்த, அசுதோஷ் வர்ஷிணி, இந்த வங்கியை நிர்வகித்து வருகிறார். இவரது தாத்தாவான, தொழிலதிபர், ஈஸ்வர் சந்தர், இந்த வங்கியை துவக்கினார். தற்போது, மூன்றாவது தலைமுறையாக இந்த வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் சேருவோருக்கு, தனியாக கணக்கு துவக்கப்படும். அவர்களுக்கு, 30 பக்கங்கள் அடங்கிய, ஒரு புத்தகம் அளிக்கப்படும். அதில், ராம நாமத்தை எழுத வேண்டும்.

இவ்வாறு அதிக அளவில், ராம நாமத்தை எழுதி, இந்த வங்கியில் சமர்ப்பிக்கலாம். அது, கணக்கில் இருப்பு வைக்கப்படும். வங்கிகளில் வழங்குவதுபோல், இதற்காக, பாஸ்புக் அளிக்கப்படுகிறது. இது குறித்து, அசுதோஷ் வர்ஷிணி கூறியதாவது:எந்த மதத்தைச் சேர்ந்தவரும், இந்த, ராம நாம வங்கியில் சேரலாம். எங்களது வங்கி, இதுவரை, ஒன்பது கும்பமேளாவை பார்த்துள்ளது. வங்கியில், 70 - 80 ஆண்டுகளாக உறுப்பினர்களாக உள்ளவர்கள், தற்போதும், ராம நாமத்தை எழுதி, எங்களிடம் அளித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்யதேசங்களில், 57 வது திவ்யதேசமாக விளங்கும் காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவங்கியது.பேரூர் பட்டீஸ்வரர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சன்னிதானம் ஆசியுடன், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த இளையனார்வேலுாரில் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar