Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பமேளாவில், ராம நாம வங்கி திருவனந்தபுரத்தில் திரண்ட ஐயப்ப பக்தர்கள்: முதல்வர் பினராயி அதிர்ச்சி திருவனந்தபுரத்தில் திரண்ட ஐயப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலைக்கோவிலில் பூக்களால் அலங்காரம்
எழுத்தின் அளவு:
பழநி மலைக்கோவிலில் பூக்களால் அலங்காரம்

பதிவு செய்த நாள்

22 ஜன
2019
10:01

பழநி: தைப்பூசவிழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக்கோவில் உட்பிரகாரம், 2,000 கிலோ பூக்களால் அலங்கரிக்கப் பட்டது.இதற்காக, பெங்களூருவில் இருந்து பூக்கள் வரவழைக்கப்பட்டன. இவற்றுடன் செவ்வந்தி, மல்லிகை பூக்களால் உட்பிரகாரத்தில் வேல், ஓம் சரவணபவ, மயில் வடிவங்களில் ரங்கோலிகள் வரையப்பட்டு இருந்தன.

ஜோதி தரிசன விழாகடலுார் மாவட்டம், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்ய ஞான சபை உள்ளது. இங்கு, நேற்று காலை, 6:00 மணி, 10:00; மதியம், 1:00; இரவு, 7:00; 10:00 இன்று காலை, 5:30 மணி என, ஆறு காலங்களில் கரும் பெருந்திரை, நீலப் பெருந்திரை, பச்சைத்திரை, செம்மைத்திரை, பொன்மைத்திரை, வெண்மைத்திரை, கலப்புத்திரை என, ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப் பட்டது.வள்ளலார் சித்தி பெற்ற சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நாளை, நடைபெறும். தீர்த்தவாரிதிருவண்ணாமலை அருணாச லேஸ்வரர் கோவிலில், சித்திரை மாதம் முதல், பங்குனி வரை, ஆறு, குளங்களில், ஒவ்வொரு மாதமும் தீர்த்தவாரி நடக்கும். அதன்படி, தை மாதம் பூச நட்சத்திரமான நேற்று, ஈசான்ய குளத்தில், சூல வடிவில் அருணாசலேஸ்வரர் மூழ்கி, பகல், 12:00 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலையை ஆண்ட வள்ளாள மஹாராஜாவுக்கு, அருணாசலேஸ்வரரே குழந்தையாக பிறந்தார் என, தல புராணங்கள் கூறுகின்றன.அதன்படி, தீர்த்தவாரி முடிந்த நிலையில், வள்ளாள மஹாராஜா போரில் இறந்த செய்தி, அருணாசலேஸ்வரருக்கு தகவல் தெரிவிக்கும் நிகழ்ச்சி, இதைக் கேட்டு, மேள, தாளம் முழங்காமல், குளக்கரையில் இருந்து, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, திரும்பும் நிகழ்ச்சி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா இன்று நடந்தது. ... மேலும்
 
temple news
திருச்சி; சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் தைப்பூசத் திருவிழாவின்  5ம் நாளில் உற்சவ ... மேலும்
 
temple news
வாரணாசி;  காசியின் பகவதி அன்னபூர்ணேஸ்வரியின் பிராண பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில், 54வது திவ்ய தேசமாக விளங்குகிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar