காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பாண்டுரங்க சுவாமி, லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று (ஜன., 21ல்) நடந்தது.இக்கோவில் வளாகத்தில், புதிதாக வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணியர், ஆண்டாள், நாகம்மன் மற்றும் சீரடி சாய்பாபா ஆகியோருக்கு தனித்தனி சன்னிதி கட்டப்பட்டது.
திருப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, யாக சாலை பூஜை துவங்கியது. நேற்று (ஜன., 20ல்), காலை, 7:20 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள், கும்பாபிஷேகத்தை கண்டு களித்தனர்.