பதிவு செய்த நாள்
24
ஜன
2019
12:01
திருப்பூர்: திருப்பூர், வேலம்பாளையம் அருகிலுள்ள காவிலிபாளையம் ஸ்ரீமாகாளியம்மன் கோவில், கும்பாபிேஷக ஆண்டு விழா நேற்று நடந்தது.திருப்பூர் மாநகராட்சி, காவிலிபாளையம் புதுார் ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில், கடந்தாண்டு கும்பாபிேஷகம் நடந்தது.முதலாம் ஆண்டு விழாவையொட்டி, 108 சங்குபூஜை நேற்று நடந்தது.காலை, 8:00 மணிக்கு, விநாயகர் வழிபாடும், 108 சங்குபூஜையும், காலை, 11:00 மணிக்கு, அபிேஷக பூஜையும், சங்காபிேஷகமும் நடந்தது. சிறப்பு அலங்காரபூஜை, மகா தீபாராதனையை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், காவிலிபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.