Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு ... சிவபுரிபட்டியில் வடுகபைரவர் பூஜை சிவபுரிபட்டியில் வடுகபைரவர் பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலம் முருகர் கோவிலில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
மயிலம் முருகர் கோவிலில் திருவிளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

29 ஜன
2019
11:01

மயிலம்: மயிலம் முருகர் கோவில் திருப்படி விழாவில் திருவிளக்கு பூஜை நடந்தது.மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவில் திருப்படி விழா நேற்று நடந்தது. காலை 5:30 மணிக்கு மலையடிவாரத்திலுள்ள அக்னி குளக்கரையில் உள்ள சுந்தரவிநாயகர் கோவில் வழிபாட்டிற்கு பின்னர் திருப்படி விழாக் குழுவினர் பால், பன்னீர், புஷ்ப காவடிகளுடன் மலைக்கோவிலுக்கு வந்தனர்.முன்னதாக காலை 7:00 மணிக்கு கோவில் திருப்படிகளை பக்தர்கள் துாய்மை செய்து மஞ்சள், குங்குமம் வைத்து படிக்குபடி சூடம் ஏற்றி வழிபட்டனர்.

காலை 8:00 மணிக்கு நடந்த ஆன்மிக கூட்டத்திற்கு மயிலம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார். மயிலம் தமிழ் கல்லுாரி முன்னாள் முதல்வர் திருநாவுக்கரசுராமசிவகுமார், தமிழ் துணை முதல்வர் திருநாவுக்கரசு தினஷே்குமார் ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.கோவில் மண்டபத்தில் காலை 9:00 மணிக்கு உலக அமைதிக்காக 501 பெண்கள் திருவிளக்கு வழிபாடு செய்தனர்.


கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு மூலவருக்கு மகா தீபாரானை, வழிபாட்டிற்கு பின்னர் பகல் 12:00 மணிக்கு மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழுப்புரம் வள்ளியம்மை திருப்புகழ் சபை, கண்டாச்சிபுரம் கோலாட்ட குழுவினர், வளையாம்பட்டு, மேலமங்கலம் பெரும்பாக்கம், சென்னகுணம் ஆகிய ஊர்களிலிருந்து பஜனை குழுவினர் பக்தி பாடல்களை பாடினர். இரவு 9:00 மணிக்கு உற்சவர் கிரிவல காட்சி நடந்தது.திருப்படி விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், கல்லுாரி செயலாளர் ராஜீவ்குமார் ராஜேந்திரன் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar