Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஒருவருக்காக மற்றொருவர் வழிபட்டால் ... ஆரோக்கியமாக வாழ இதை பின்பற்றலாமே...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கேட்டதும் கொடுப்பவளே கிருஷ்ணா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2019
01:01

காஞ்சிப்பெரியவரிடம் பேட்டிக்காக வந்த பத்திரிகை நிருபர் ஒருவர், ஒலிநாடாவில் அவரது சொற்பொழிவை பதிவு செய்தார். பக்தர்கள் குழுமியிருந்தனர்.  சுவாமிகள் சிரித்தபடி கேள்வி ஒன்றை  எழுப்பினார். ’உலகில் முதன் முதலாக குரலைப் பதிவு செய்த கருவி எது?’ விடை தெரியாததால் மவுனம் காத்தனர் பக்தர்கள். ”மகாபாரதப்போர் நடந்த போது  அம்புப்படுக்கையில் படுத்திருந்தார் பிதாமகர் பீஷ்மர். அவரைச் சுற்றி பாண்டவர்கள், கிருஷ்ணர், வியாசர் இருந்தனர். இந்நிலையில் ஆயிரம் திருநாமங்களால் கிருஷ்ணரை ஸ்தோத்திரம் செய்தார் பீஷ்மர்.  அனைவரும் மெய் மறந்து கேட்டனர். யாருக்கும் அதைக் குறிப்பெடுக்கும் எண்ணம் வரவில்லை. சொல்லி முடித்ததும், ”அடடா... இந்த அற்புதமான சகஸ்ரநாமத்தை பதிவு செய்யவில்லையே” என வருந்தினார் தர்மர்.  கிருஷ்ணரிடம் வழிகாட்டுமாறு வேண்டினார். ”என்னால் என்ன செய்ய முடியும்? உங்களைப் போல பீஷ்மர் சொன்னபோது நானும் கேட்டுக் கொண்டிருந்தேன்” என்றார்  எல்லாம் அறிந்த கிருஷ்ணர்!

” உலக நன்மைக்காக சகஸ்ரநாமத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்” என கோரிக்கையை மீண்டும் வைத்தனர். பக்தர் விருப்பத்திற்கு பகவான் செவி சாய்க்காமல் போவாரா என்ன? கேட்டதும் கொடுப்பவன் அல்லவா? ” உன் தம்பி சகாதேவன் ஸ்படிக மாலை அணிந்திருக்கிறான். ஒலி அலைகளைப் பதிவு செய்யும் ஆற்றல் அதற்குண்டு.  அவனது மாலையிலுள்ள ஸ்படிகங்கள் சகஸ்ரநாமத்தை உள்வாங்கியுள்ளன. சகஸ்ரநாமம் சொல்லிய இப்புனிதபூமியில்  அமர்ந்து சிவனை தியானித்தால் ஒலி அலையைத் திரும்ப ஸ்படிகம் எழுப்பும். அதைக் கேட்டு சகாதேவன் சொல்ல வியாசர் எழுதட்டும். இதனால் உலகமே நன்மை பெறும்” என்றார் கிருஷ்ணர். அதன்படியே சகஸ்ரநாமம் நமக்கு கிடைத்தது. இதனடிப்படையில் உலகின் முதல் ஒலிப்பதிவுக் கருவி அதாவது வாய்ஸ் ரிகார்டர் - ஸ்படிக மாலை தான். இந்த விஷயத்தை கேட்டு அனைவரும் அதிசயித்தனர். திருப்பூர் கிருஷ்ணன்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar