பதிவு செய்த நாள்
31
ஜன
2019
12:01
ஓமலூர்: ஓங்காளியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. ஓமலூர் அடுத்த, குப்பூர், காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று காலை, சக்தி அழைத்தல், கரகம், எருமைக்கிடா வெட்டுதல், மாலை, அலகு குத்துதல், பூங்கரகம், வாணவேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்தது.
இன்று மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் நடக்கும். அதேபோல், பூசாரிப்பட்டி, மகா காளியம்மன் கோவிலில், சக்தி கரகம், எருமைக்கிடா வெட்டுதல் நடந்தது. இன்று காலை, பொங்கல் வைத்தல், அக்னி கரகம், அலகு குத்துதல் நடக்கும். மேலும், பல்பாக்கி ஓங்காளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. ஓமலூர் எம்.எல்.ஏ., வெற்றிவேல் தொடங்கிவைத்தார். பின், கோவிலைச் சுற்றி, திரளான பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்து வந்து, நிலையை அடைந்தனர். மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.