Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கம்புணரி முத்துவடுகநாதர் ... ஹிந்து ஆன்மிக, சேவை கண்காட்சி நிறைவு ஹிந்து ஆன்மிக, சேவை கண்காட்சி நிறைவு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவபாஷாணத்தில் தை அமாவாசை வழிபாடு
எழுத்தின் அளவு:
நவபாஷாணத்தில் தை அமாவாசை வழிபாடு

பதிவு செய்த நாள்

05 பிப்
2019
12:02

தேவிபட்டினம்: தை அமாவாசையை முன்னிட்டு தேவிப்பட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் நவக்கிரகங்களை சுற்றி வந்து முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர். முன்னதாக எள், அரிசி, பழங்கள் உள்ளிட்ட பண்டங்களை முன்னோருக்கு படையல் இட்டு வழிபாடு செய்து நவகிரகங்களுக்கு சிறப்புஅபிேஷக ஆராதனைகள் செய்தனர். பக்தர்கள் நவபாஷாண கடலில் புனித நீராடியாதால் இந்து அறநிலையதுறை சார்பில் பேரிகார்டுகள் அமைத்து பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பொன்குளத்தில் உள்ள விக்னேஷ்வர பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு  கோயிலுக்கு 2.18 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய வேலு ஆசாரியின்  122 வது ஜெயந்தியும், 30 வது குருபூஜையும் தை அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் தீபாராதனையும், பின் அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை டிரஸ்டி பி.வீரசேகர் மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தொண்டி: தொண்டி அருகே தீர்த்தாண்டதானத்தில் சகலதீர்த்தேஸ்வரர் கோயில் உள்ளது. ராமபிரான் சீதையை தேடி இவ்வழியே சென்ற போது இங்கு இளைப்பாறினார். தாகம் ஏற்படவே அகத்தியர் தீர்த்தம் உண்டாக்கி கொடுத்ததால் தீர்த்தாண்டதானம் என பெயர் பெற்றதாக ஸ்தல வரலாறு உள்ளது.
நேற்று தை மாத அமாவாசையை முன்னிட்டு அங்குள்ள கடலில் ஏராளமானோர் புனித நீராடினார்கள். சகலதீர்த்தேஸ்வரர், சவுந்தரநாயகி அம்மனுக்கு சிறப்பு
பூஜைகள் நடந்தது. பின்பு சுவாமி வீதி உலா நடந்தது.

சேதுக்கரை: சேதுக்கரை கடற்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலை 4:00 மணி முதல் பக்தர்கள் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம், திதி உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை செய்தனர். வெளி மாவட்டங்களில் இருந்தும், சுற்று வட்டாரப்பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்து பித்ரு கடன் பூஜைகளை செய்து வழிபாடு செய்தனர்.  கடற்கரை அருகே உள்ள சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சனேயர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேதுக்கரை செல்லும் வழியில் உள்ள அகத்தியர், வெள்ளைப்பிள்ளையார் கோயிலின் முன்பு சிதறு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

*திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் விசேஷ திருமஞ்சனம் நடந்தது.  நாலாயிர திவ்ய பிரபந்தப்பாடல்கள் பாடப்பட்டது. சேதுக்கரை வந்த ஏராளமான பக்தர்கள் திருப்புல்லாணி பெருமாள் கோயிலுக்கு சென்று நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.

* சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லியம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாரியூர் கடற்கரையில் புனிதநீராடி தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றினர். கோயிலில் அன்பர் குருமுருகா சார்பில் அன்னதானம், குளிர்பானங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பிரதோஷ அன்னதானக்கமிட்டியினர் செய்திருந்தனார்.
* மூக்கையூரில் உள்ள கடலில் புனித நீராடிய திதி, சங்கல்ப பூஜைகளை செய்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிராட்வே; கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். திதிகளில் ஆறாவது திதியாக வருவது ஆறுமுகனுக்கு ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயில்களில் தேய்பிறை பஞ்சமியை யொட்டி அம்மனுக்கு ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; ஆனி மாதம் நான்காவது செவ்வாய் கிழமையான நேற்று, மயிலிறகு மாலை அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தெலுங்கானா கவர்னர் ஜெயிஷ்னுதேவ் வர்மா சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar