தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா நேற்று( பிப்., 10ல்) அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இரவு ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. அதிகாலை 3:00 மணிக்கு வெள்ளி பல்லக்கில் கொடி பட்டம் வீதி உலா வந்தது.
தொடர்ந்து 5 மணிக்கு செப்புக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. முக்கிய நிகழ்வான மாசித்தேரோட்டம் பிப்., 19 ம் தேதி நடக்கிறது.