பதிவு செய்த நாள்
11
பிப்
2019
02:02
காஞ்சிபுரம்:காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத் துடன் நேற்று (பிப்.,10ல்) துவங்கியது. முதல் நாள் காலை, அம்மன், வெள்ளி விருஷபம் வாகனத்தில் வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோவில் பிரம் மோற்சவம் ஆண்டு தோறும் தை மாதம் நடைபெறும். இந்த ஆண்டு, நேற்று (பிப்.,10ல்) காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது.
முன்னதாக நேற்று முன்தினம் (பிப்., 9ல்) அதற்கான சண்டிஹோமம் நடந்தது. நேற்று (பிப்., 10ல்) கொடியேற்றப்பட்ட பின், அம்மன் வெள்ளி விருஷபம் வாகனத்தில் வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, காமாட்சி அம்மன் தினமும் காலை, இரவு நேரங்களில் வெவ்வேறு
வாகனங்களில் வீதிவுலா செல்வார்.நாளை (பிப்., 11ல்) காலை, அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார். வரும், 21ம் தேதி காலை, 5:00 முதல், 7:00 மணி வரை அம்மன் விஸ்வரூப தரிசனம் நடைபெறும். அன்று இரவு, விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.