ராஜபாளையம்:ராஜபாளையம் சொக்கர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மாசி மகம் மகா பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கொடி மரத்திற்கு வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்களை தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. சொக்கர் , மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். 10 நாட்கள் நடக்கும் விழாவின் போது சுவாமி, அம்பாள் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வருதல், பல்வேறு குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தெப்போற்ஸவம் 17லிலும், 18 ல் தேரோட்டமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ராம்கோ குரூப் நிறுவனங்கள் செய்கின்றன.