பதிவு செய்த நாள்
11
பிப்
2019
03:02
சாணார்பட்டி:சாணார்பட்டி பகுதி கிராமங்களில் உள்ள கோயில் கும்பாபிஷேக விழா நேற்று (பிப்.,10ல்) நடந்தது.
மஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள விநாயகர், காளியம்மன், பாலமுருகன் கோயில்களின் கும்பாபிஷேக விழா கடந்த பிப்.8 அன்று விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது.
இதையடுத்து முதற்கால யாக வேள்விகள் நடந்தது. மறுநாள் இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக வேள்விகள் நடந்தன. நேற்று (பிப்., 10ல்) காலை நான்காம் கால யாக வேள்விகளை தொடர்ந்து புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
இதே போல் கொண்டன்செட்டிபட்டியில் உள்ள சித்திவிநாயகர், காளியம்மன் மற்றும் பகவதியம்மன் கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி அன்னதானம் நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். ஊர் பொதுமக்கள் விழா ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
வடமதுரை குளத்தூரில் மகாகணபதி, காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
முன்னதாக நேற்றுமுன்தினம் (பிப்., 9ல்) காலை விக்னேஸ்வர, புண்ணியாகவசனம் பூஜைகளுடன் விழா துவங்கி இரண்டு கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று (பிப்., 10ல்) காலை கும்பங்களில் புனித நீருற்றி கும்பாபிஷேகம் நடந்தது. எரியோடு வரதராஜ பெருமாள் கோயில் அர்ச்சகர் சவுந்தரராஜன் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். பரமசிவம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் லட்சுமணன், அகரம்
பேரூராட்சி முன்னாள் தலைவர் சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.