நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ் வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி, ஊஞ்சல் உற்சவம் நடந்தது.இதையொட்டி, 19ம் தேதி மாலை 3:00 மணிக்கு விநாயகர், ராஜராஜேஸ்வரர், ராஜராஜேஸ்வரி, தண்டாயுதபாணி, நால்வர், சித்தர் ஜீவசமாதிகள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் கோவில் மலையடிவாரத்தை 16 முறை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். இரவு 8:30 மணிக்கு ராஜராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஆலய உலா வந்து, ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9:00 மணிக்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.