Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புனிய யாத்திரை சென்றவர்கள் அரசு ... காரைக்குடி காமாட்சி அம்மன் கோயிலில் மாசி திருவிழா காரைக்குடி காமாட்சி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருங்கற்களில் உயிர்பெறும் சிலை சிவகங்கை சிற்பியின் கலைநயம்
எழுத்தின் அளவு:
கருங்கற்களில் உயிர்பெறும் சிலை சிவகங்கை சிற்பியின் கலைநயம்

பதிவு செய்த நாள்

02 மார்
2019
12:03

சிவகங்கை: கல்லில் சிலை செதுக்கி ரசித்த நம் தமிழன். கடவுளுக்கு சிலை வடித்து கோயிலில் வைத்து, ஆன்மிகத்தை வளர்த்தான். இயற்கையாகவே கற்சிலைகளுக்கு மிகப்பெரிய சக்தி உண்டு.

இதன் காரணமாகவே இன்றைக்கும் புதிய கோயில் கட்டி, கும்பாபிஷேகம் நடத்துவோர் கோயிலில் உள்ள அனைத்து சிலைகளையும் கருங்கற்களால் வடிவமைத்து அதற்கு சக்தி வழங்கி வழிபடுகின்றனர்.

அவ்வகையில் சிவகங்கை அருகே சாமியார்பட்டி விலக்கில் கருங்கற்களால் சுவாமி சிற்பங்களை தத்ரூபமாக செதுக்கி வருகிறார் அலவாக்கோட்டை சிற்பி ஆர். வரதராஜ்.
அவர் கூறியதாவது: இதற்கான கருங்கற்களை கோவை மாவட்டம் ஊத்துக்குளியில் இருந்து வாங்குகிறோம். இக்கற்கள் தான் மிஷினில் செதுக்கும் போது சேதமடையாமல் பாலீசாக இருக்கும். மூன்றரை அடி உயரம் முதல் 60 அடி உயரம் வரையிலான சிலைகள் செய்து தருகிறோம்.

முதலில் கருங்கல்லில் சுவாமி வடிவத்தை தத்ரூபமாக வரைவோம்.அந்த வரைபடத்தின் படியே மிஷினால் கற்களை செதுக்கி, உருவம் கொடுப்போம். அம்மன், சுவாமி அம்பாள் சிலைகளுக்கு ஆபரண டிசைன் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக, மிஷின் இன்றி (நாகாஷ்) கையாள் செதுக்குவோம். சிறிய சிலைகள் செய்ய 3 நாட்களும், பெரிய சிலைகள் அதன் வேலைபாட்டை பொறுத்து 60 நாட்கள் வரை ஆகும்.

குறைந்தது சிலை தயாரிக்க 7 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கிறோம்.

கற்சிலை செதுக்க காரைக்குடி கோவிலூர் மடத்தில் பயிற்சி பெற்றுள்ளேன். அதன் மூலம் இத்தொழிலில் ஆர்வத்தை செலுத்தி, இறைவனுக்கு என் கலைப்பணியை அர்ப்பணிக்கிறேன், என்றார்.இவரை பாராட்ட... 89408 88831.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் பன்னிரண்டாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar