Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகின் மிகப் பிரமாண்ட ... பல்லடம் சிவாலய பக்தி ஓட்டம்:பக்தர்கள் பரவசம் பல்லடம் சிவாலய பக்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் சிவாலயங்களில் எதிரொலித்த நமசிவாய: மகா சிவராத்திரி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருப்பூர் சிவாலயங்களில் எதிரொலித்த நமசிவாய: மகா சிவராத்திரி விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

06 மார்
2019
01:03

திருப்பூர்:மகா சிவராத்திரி முன்னிட்டு திருப்பூர் வட்டார சிவாலயங்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் பரவசத்துடன் பங்கேற்று, விடியவிடிய வழிபாடு செய்தனர்.மாதம் தோறும் அமாவாசைக்கு முந்தைய தினம் சிவராத்திரியாக பின்பற்றி, சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதில், மாசி மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி என்பதால், சிறப்பு பெற்றது.

அவ்வகையில் நேற்று முன்தினம் (மார்ச்., 4ல்) மகா சிவராத்திரி விழா திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் கொண்டாடப்பட்டது.

திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், வெள்ளகோவில் செல்வக்குமாரசாமி கோவில், திருப்பூர், லட்சுமி நகர் அண்ணாமலையார் கோவில், திருப்பூர், கோல்டன் நகர் காசி விஸ்வநாதர் கோவில், சாமளாபுரம் சோளீஸ்வரர் கோவில், சேவூர் வாலீஸ்வர சுவாமி கோவில், குட்டகம், முக்கண்ணீஸ்வரர் கோவில், பழங்கரை பொன் சோழீஸ்வரர் கோவில், உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் நேற்று முன்தினம் (மார்ச்., 4ல்) மகா சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன.

நேற்று முன்தினம் (மார்ச்., 4ல்) மாலை துவங்கி, அதிகாலை ஐந்து மணி வரை, மொத்தம், நான்கு கால பூஜைகள் நடந்தன. பரதநாட்டியம் உட்பட பல்வேறு பக்தி கலை நிகழ்ச்சிகள் நடந்தன. திருப்பூர், முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவிலில் நடந்த மகா சிவராத்திரி விழாவில், அலகு தரிசனம், ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதியுலா ஆகியன நடந்தன. மகா சிவராத்திரியன்று நள்ளிரவு, மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அங்காளம்மனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar