திருக்கோவிலூர் திரவுபதி அம்மன் கோவிலில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2019 02:03
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் அடுத்த பரனூர் சத்திரம் திரவுபதி அம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.
விழாவையொட்டி, திரவுபதி அம்மன் சமேத அர்ஜூனன் நேற்று முன்தினம் (மார்ச்., 6ல்) சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. மாலை 4:00 மணிக்கு, சுவாமி கோவிலை அடைந்தவுடன் அபிஷேகம் முடிந்து அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் எழுந்தருள, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.தொடர்ந்து பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.