Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் ... கள்ளக்குறிச்சி அங்காள பரமேஸ்வரி கோவில் தேர் திருவிழா கள்ளக்குறிச்சி அங்காள பரமேஸ்வரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாம்­ப­ர­நா­தர் கோவி­லில் பிரம்மோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
ஏகாம்­ப­ர­நா­தர் கோவி­லில் பிரம்மோற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

12 மார்
2019
12:03

காஞ்சிபுரம்: ஏகாம்­ப­ர­நா­தர் கோவி­லில், இந்­தாண்டு பங்­குனி உத்­திர பிரம்­மோற்­சவ விழா­வுக்­கான கொடி­யேற்­றம், நேற்று இரவு ஏற்­றப்­பட்­டது. காஞ்­சி­பு­ரம் ஏகாம்­ப­ர­நா­தர் கோவி­லில் நடக்­கும், பங்­குனி உத்­திர பிரம்­மோற்­ச­வம், விசஷே­மா­னது. நான்கு ஆண்­டு­க­ளாக, இவ்­விழா நடை­பெ­ற­வில்லை. இந்த ஆண்டு, கண்­டிப்­பாக நடத்த வேண்­டும் என, பக்­தர்­கள் கோரிக்கை விடுத்­த­னர்.

இந்­நி­லை­யில், நேற்று காலை, கோவி­லில் கொடி­யேற்ற விழா நடத்த, கோவில் நிர்­வா­கம் நட­வ­டிக்கை மேற்­கொண்­டது. ஆனால், கோவில் அருகே உள்ள தெரு­வில், ஒரு­வ­ரின் மர­ணத்­தால், இப்­பணி தடை­ப்பட்­டது. பின், மாலை­யில் கொடி­யேற்­றம் நடத்த முடிவு செய்­யப்­பட்­டது. இதற்­கி­டையே, பங்குனி உத்­திர பிரம்­மோற்­சவ விழா­வில், பழைய உற்­ச­வர் சிலையை வீதி­யு­லா­வுக்கு பயன்­ப­டுத்த வேண்­டும் என, பக்­தர் ஒரு­வர், சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் தொடுத்த வழக்­கில், நேற்று தீர்ப்பு வெளி­யா­னது. அதில், ‘பிரம்­மோற்­ச­வம், வழக்­கம் போல் நடத்த வேண்­டும். மூன்று மணி நேரத்­தில், சிதி­லம் அடைந்த பழைய உற்­ச­வர் சிலையை, ஜடி­பந்­த­னம் செய்து, வீதி­யு­லா­வுக்கு பயன்­ப­டுத்த வேண்­டும்’ என, நீதி­ப­தி­கள் குறிப்­பிட்­டுள்­ள­தாக, தக­வல் வந்­தது. இதை­ய­டுத்து, கோவில் வளா­கத்­தில், அற­நி­லை­யத் துறை அதி­கா­ரி­கள், ஆலோ­சனை நடத்தி கொண்டிருந்த­னர்.

இதற்­கி­டையே, உயர் நீதி­மன்ற உத்­த­ரவை அறிந்த பக்­தர்­கள், உப­ய­தா­ரர்­கள், கோவில் செயல் அலு­வ­லர் அலு­வ­ல­கம் முன் கூடி, நீதி­மன்ற உத்­த­ரவை நிறை­வேற்­றும்­படி, கோஷ­மிட்­ட­னர். இந்­நி­லை­யில், சிலை கடத்­தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன் மாணிக்க­வேல், அற­நி­லை­யத் துறை உதவி ஆணை­யர், ரம­ணி­யி­டம், மொபைல் போனில் பேசி­னார். அப்­போது, ‘பழைய சிலையை வைத்து உற்­ச­வம் நடத்­துங்­கள். விழா­விற்கு பாது­காப்பு தேவை­யென்­றால் ஏற்­பாடு செய்­கி­றேன்’ என, கூறி­னார். இதை­ய­டுத்து, இரவு, 7:00 மணிக்கு, பங்­குனி உத்­திர பிரம்­மோற்­சவ விழா கொடி­யேற்­றம், ஏகாம்­ப­ரர் கோவி­லில் நடந்­தது. காலை­யில் இருந்து, கோவி­லில் காத்­தி­ருந்த பக்­தர்­கள், பழைய உற்­ச­வரை பயன்­ப­டுத்தி பிரம்­மோற்­ச­வத்தை நடத்த உயர் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­ட­தால், சந்­தோ­ஷம் அடைந்துள்ளனர். திருத்தணி:  திருவாலங் காடு, வடா­ரண்­யேஸ்­வரர் கோவிலில், பங்­குனி மாத பிரம்­மோற்­சவ விழா, கொடி­யேற்­றத்­து­டன், நேற்று நடந்­தது. 23ம் தேதி வரை பிரம்­மோற்­சவ விழா நடை­பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 
temple news
கருமத்தம்பட்டி; விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூச தரிசன விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar