பொள்ளாச்சி -கோவை நெடுஞ்சாலையில் பாலாறு ஆஞ்சனேயர் கோயில் உள்ளது. மிக அற்புதமான இந்தக் கோயிலில் ஒரே சன்னிதியில் இரண்டுஆஞ்சனேயர்கள் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு. இதில் ஒரு ஆஞ்சனேயர் திருமேனி கிடந்த கோலத்தில் சுயம்பு மூர்த்தியாகவும், மற்றொரு ஆஞ்சனேயர், சஞ்சீவி அனுமனாகவும் காட்சி தருகின்றனர்.