பெரியாயி அம்மன் கோவிலில் பூஜை; அருளாசி பெற்ற பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஆக 2025 10:08
ஊட்டி: பந்தலூர் அருகே அத்திக்குன்னா பெரியாயி அம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பகுதியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அத்திக்குன்னா பகுதியில் அமைந்துள்ளது பெரியாயி அம்மன் கோவில். இங்கு தினசரி பூஜைகள் நடப்பதுடன், அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அருள் வாக்கு கூறும் நிகழ்ச்சி நடைபெறும். அமாவாசை நாளாக நேற்று காலை ஆறு மணி முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பட்டு சார்த்துதல், மஞ்சள் மற்றும் குங்கும அபிஷேகம் செய்தல், பூசணிக்காய் மற்றும் தேங்காய் உடைத்து அருள்வாக்கு கூறுதல், காணிக்கையாக வழங்கப்பட்ட கோழிகள் பலியிடுதல் நிகழ்ச்சிகள் நடந்தது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். இதில் பந்தலூர் மற்றும் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று அருள் பெற்று சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.