ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி மாரியம்மன் கோவில் தெரு இலங்கை கரை காளியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு பூக்குழி விழா நடைபெற்றது. விரதமிருந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி ஊர்வலமாக வந்து கோவில் முன்பு தீ மிதித்து நேர்த்திகடன் நிறைவேற்றினர். பின்னர் நடந்த சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.