Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பந்தலூர் முருகன் கோவில் குடமுழுக்கு பல்லடம் மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா பல்லடம் மாரியம்மன் கோவிலில் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லாண்டியம்மன் கோவிலில் குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
செல்லாண்டியம்மன் கோவிலில் குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

11 ஏப்
2019
01:04

ஈரோடு: செல்லாண்டியம்மன் கோவிலில், பக்தி பரவசத்துடன் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு, நேதாஜி சாலை முனிசிபல் சத்திரம் பகுதியில் எழுந்தருளியுள்ள செல்லாண்டியம்மன் திருக்கோவில் குண்டம் பொங்கல் விழா கடந்த மார்ச், 27ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

அதை தொடர்ந்து கொடியேற்றம், காவிரி சென்று தீர்த்தம் எடுத்து வருதல், அலகு ஊர்வலம், அக்னி கபால ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக காரைவாய்க்காலில் இருந்து அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. அதில், கோவில் பூசாரி மற்றும் குண்டம் இறங்க காப்பு கட்டி விரதமிருந்து வந்த பக்தர்கள், கலந்து கொண்டு அம்மையை அழைத்து ஊர்வலமாக வந்து, கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் இறங்கினர். முதலில் பூசாரி, அவரை தொடர்ந்து, கோவில் சாமியாடி பெண் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில், சிலர் வேல் அலகு குத்தியபடி குண்டம் இறங்கினர். தொடர்ந்து பொங்கல் வைத்தல், மாலையில் மாவிளக்கு ஊர்வலம், இரவில், அரிவாள் மீது ஏறி அம்மன் அருள் வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடந்தது.

* அந்தியூர், பத்ரகாளியம்மன் கோவிலில், பங்குனி மாத குண்டம் தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த, 21ல், துவங்கியது. கோவில் வளாகத்தில் உள்ள, 60 அடி குண்டத்தில் பக்தர்கள் நேற்று குண்டம் இறங்கினர். அந்தியூர், புதுப்பாளையம், தவிட்டுப்பாளையம், வெள்ளையம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, 1,000 க்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கினர். இதையடுத்து தவிட்டுப்பாளையம் அழகு முத்துமாரியம்மன் கோவில் அருகே, 30க்கும் மேற்பட்ட பக்தர்கள், பலவிதமான அலகுகள் குத்திக் கொண்டு ஊர்வலமாக வந்து, இறுதியில் கோவிலை வந்தடைந்தனர். 12ல், தேர்த் திருவிழா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம்  அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி திருமலையில் நான்கு நாட்கள் நடைபெற்று வந்த சங்கோபங்க ஸ்ரீ ஸ்ரீனிவாச விஸ்வசாந்தி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் சண்டிகேஸ்வரருக்கு புதிய தேர் செய்யப்பட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணா ஆசிரமத்தில் நடந்த கும்பாபிஷேக விழாவில் கோபுர ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை, குறிஞ்சேரியில் ஸ்ரீரங்கநாத சுவாமி கோவில் கும்பாபிகும்பாபிஷேகம் இன்று சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar