பதிவு செய்த நாள்
06
மே
2019
03:05
சேலம்: சேலம், விஜயராகவாச்சாரியார் ஹாலில், ஸ்ரீஸத்குரு தியாகராஜ சுவாமிகளின், 172ம் ஆண்டு ஆராதனை, கடந்த, 2ல் தொடங்கியது. நேற்று (மே., 5ல்) காலை, உஞ்சவிருத்தி எடுத்தல், பஞ்சரத்ன கீர்த்தனை கோஷ்டி கானம், ஸத்குருவின் உற்சவ சம்பிரதாய கீர்த்தனை நடந்தது. மாலை, சுசித்ரா பாலசுப்பிரமணியத்தின் ஸங்கீத உபன்யாசம், ஆஞ்சநேய விடையாற்றி உற்சவம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, சேலம் ஸங்கீத வித்வத் ஸபா நிர்வாகிகள் செய்திருந்தனர்.